
ஒவ்வொரு நாளும்
சாலைகளில்
கண்களறியாத உயிர்கள்
தொடங்கி
கன்றுக்குட்டிகள்
நாய்க்குட்டிகள்
ஆட்டுக்குட்டிகள்
கோழிக்குஞ்சுகள்
பூனைக்குட்டிகள்
இவற்றோடு
மனிதக் குட்டிகளும்
கண்ணுக்குத் தெரியாமல்
வரையப்பட்டிருக்கும்
மரணக் கத்தியில்
வெட்டுப்பட்டு
உயிரற்றதுவாய்...
மனசு கேட்கிறது
திடீரென்று வரும் மரணத்தில்
அவை என்ன நினைக்கும்?
எல்லாம் மறந்த நாளில்
முகமறியா குரல்வழி
விடை கசிகிறது..
பொசுக்குன்னு உயிர்போற
புண்ணியம் எல்லாருக்கும்
கிடைக்குமா?,........
கிடைக்குமா இதுதான்
சரியான விடையென்பதற்காதாரம்..?
இருப்பையும் இல்லாமையையும் அதிகம் பேசுகின்றன உங்கள் கவிதைகள். இது மனமுதிர்வின் அடையாளம். வாழ்வை அகன்றாழமாய்ப் பார்க்கும் இந்தப் பார்வை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
ReplyDeleteதொடரும் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சுந்தர்ஜி.
ReplyDelete