Friday, October 29, 2010


கோயிலைத்
திறக்கிற கதவின் ஓலியும்
பிச்சையிடுதலுக்காக
திறக்கிற வீட்டுக்கதவின் ஒலியும்
ஓர்
இசையாகப் பரவுகிறதெங்கும்..




எந்தப் பயணத்திலும்
கடைசியாகவே
நானிருந்தாலும்
அந்தப் பயணம்
என்னைக் கொண்டு
முடிகிறதென்பது
உவகையுடன்
தொடர்ந்து
பயணித்துக்கொண்டிருக்கிறது...





இரவில்
தொடர்ந்து குழந்தையை
அழவிடுபவர்கள்
நரகத்திற்குப் போகக் கடவர்....
என்னை மலடியாக
சாபமிட்ட கடவுளின்
சாபத்தைப் போல...

No comments:

Post a Comment