Friday, October 29, 2010

கொட்டிவிட்ட
டம்ளரிலிருந்து
நீர் பரவுதலைப்போல
வெயில் பரவும் சாலையின்
நடுவே
அதன் இயல்பில்
கடந்துகொண்டிருக்கும்
மரவட்டையின்மேல்
நசுக்கிவிடாமல்
சட்டென்று டூவீலரைத்
வளைக்கிறேன்
அதன்
நம்பிக்கையைக்
காக்கும் பொருட்டு.....





எரியும்
நண்பனின் சடலத்திலிருந்து
அவன் மகனின்
அண்மைக்கு வருகிறது
ஒரு வெப்பம்
அவன் உடலில் வழியும்
நீரின் குளிர்மையைத்
தணிக்கவும்
தானின்றி தனயன் இனி
தாங்கப்போகும்
வெப்பம் தணிக்கவுமாக....
என் கண்களிலிருந்து
வருகின்றன
நீர்த்துளிகள்
அவனுக்கு அனுசரணையாக
வேறன்றி...

No comments:

Post a Comment