
ஒரு ஆழமான காயத்தின்
சீழ்பிடித்த வலியும்
நான் என் தந்தையைக்
கை ஓங்கிய தருணத்தின்
வலியும்
இப்போது என்பிள்ளை
என் கழுத்தைப் பிடித்தமுக்கிய
தருணத்தின் வலியும்
ஒன்றாகவே
உணர்த்தப்படுகின்றன
நெருக்கடியான சாலையின்நடுவே
திறந்த மார்புகளுடன்
அலையும் அந்த
மனம் பிறழ்ந்த பெண்ணின்
உணர்வான காலத்தின்
வலிகளைப் போலவே....