Saturday, March 5, 2011

ஜென் இலைகள் 3





ஒரு வலியை இன்னொரு
வலிதான் இடம்பெயர்க்கிறது...

ஒரு வாழ்வை இன்னொரு
வாழ்வுதான் அர்த்தப்படுத்துகிறது...

ஒரு கோபத்தை இன்னொரு
கோபம்தான் சந்துவிக்கிறது...

ஒரு ஆறுதலை இன்னொரு
ஆறுதல்தான் உணரவைக்கிறது...

ஒரு அவமானத்தை இன்னொரு
அவமானம்தான் அடையாளப்படுத்துகிறது...

ஒரு அசிங்கத்தை இன்னொரு
அசிங்கம்தான் மூடிவைக்கிறது...

ஒரு ஆளுமையை இன்னொரு
ஆளுமைதான் நிலைப்படுத்துகிறது...

ஒரு நம்பிக்கையை இன்னொரு
நம்பிக்கைதான் நிறைவு செய்கிறது..

ஒரு வழியை இன்னொரு
வழிதான் உருவாக்கித்தருகிறது...


இவை எல்லாவற்றையும்
கடவுள்தான்
பிரிப்பதும் கோர்ப்பதுமான
நிகழ்வுகளாக்கி வைக்கிறார்
எதுவும் தெரியாதததுபோல.....

2 comments:

  1. ரொம்ப நல்லா இருக்குங்க..
    உங்களோட ப்ளாக் தீம் ரொம்ப அழகா இருக்கு.

    ReplyDelete